வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் தங்களது நாடுகளில் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து நீக்கப்படும் அந்த வாயுவின் அளவையும் சமன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியன் நாடுகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டன. எனினும், அந்த ஒப்பந்தத்தைப் பின்பற்ற, உறுப்பு நாடான போலந்து மறுத்துவிட்டதாக ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தெரிவித்தனா்.