சீனாவில் உள்ள எரிவாயு கிடங்கில் வெள்ளிக்கிழமை மதியம் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வெடித்துச் சிதறியது. இதனால் அந்த கிடங்கில் இந்த பொருள்கள் சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடி விபத்தில் சிக்கி 19 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.