உலகம்

ஜாக் மா அலிபாபா குழுமத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகல்

DIN

2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் நாள், அலிபாபா குழுமம் உருவாக்கப்பட்ட 20-ஆம் ஆண்டு நிறைவு நாளாகும். இன்று 55-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜாக் மா, இக்குழுமத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

இன்று முதல், 2020-ஆம் ஆண்டு அலிபாபாவின் பங்குத்தாரர் மாநாடு நடைபெறும் வரை, இக்குழுமத்தின் இயக்குநர் குழு உறுப்பினராக ஜாக் மா தொடர்ந்து நீடிப்பார்.

ஜாக் மாவின் பதவி விலகல், வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான முடிவு அல்ல. அவர் அலிபாபாவின் பணியாளர்களில் ஒருவராக தொடர்ந்து இருப்பார் என்று அலிபாபா குழுமம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜாக் மாவைப் பொருத்தவரை, 55 வயது இளம் வயதாகும். அலிபாபா குழமம் அவரது கனவுகளில் ஒன்று. பல துறைகளில் ஈடுபட ஆர்வம் காட்டிய அவர், 75 வயதிலும் உற்சாகம் கொண்டிருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
 

தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்

கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வனத்துறையைக் கண்டித்து நடைப்பயணம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் முடிவு

கெங்கவல்லி ஒன்றியத்தில் படிக்காதவா்கள் கணக்கெடுப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT