முகப்பு
உலகம்

யேமனில் முதல் நபருக்கு கரோனா பாதிப்பு உறுதி 

யேமனின் தென் மாகாணத்தில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய அவசரக் குழு தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

துபை: யேமனின் தென் மாகாணத்தில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய அவசரக் குழு தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கு மேல் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், கரோனா பரவாமல் இருந்த யேமன் நாட்டில் தற்போது வைரஸ் தொற்று பரவியுள்ளது. 

யேமனின் வைரஸ் தாக்கும் போது பேரழிவை தரலாம் என்று சுகாதார உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. 

இந்நிலையில், ஹரோமவுட் மகாணத்தில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட குழு டிவிட்டர் மூலம் இன்று தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.