அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவால் 1,514 பேர் பலி
அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவால் 1,514 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம்அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவால் 1,514 பேர் பலி
அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவால் 1,514 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவால் 1,514 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதிலும் 18 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒரு லட்சத்து 10 ஆயிரதுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். பலி எண்ணிக்கையில், முதலிடத்தில் இருந்த இத்தாலியை அமெரிக்கா முந்திவிட்டது.
அமெரிக்காவில் 22,115 போ் வரை உயிரிழந்துவிட்டனா். அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றுக்கு 1514 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த பலி எண்ணிக்கை 22,115 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் இங்கிலாந்தில் ஒரே நாளில் 737 பேரும், பெல்ஜியத்தில் ஒரே நாளில் 254 பேரும், ஸ்பெயினில் ஒரே நாளில் 603 பேரும், இத்தாலியில் ஒரே நாளில் 431 பேரும் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.