சீனாவில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டின் தேசிய ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டின் தேசிய ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட 36 பேரில், உள்ளூரில் 30 பேருக்கும், மீதமுள்ள 6 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாவர். சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் பெரும்பாலான தொற்று பதிவாகியுள்ளன.
சீனாவில் கரோனா பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 84,464 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 4,634 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.