முகப்பு
உலகம்

தென் கொரியாவில் வெள்ளம்: 15 பேர் பலி, 11 பேர் காணவில்லை

தென் கொரியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
15 dead, 11 missing in South Korea floods
பகிர்:

தென் கொரியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், 11-க்கும் மேற்பட்டோர் காணாமல் சென்றுள்ளதாக மத்திய பேரிடர் மற்றும் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

தென்கொரியாவில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்த நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 1,300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. அதே நேரத்தில் 705 கிடங்குகள் மற்றும் கால்நடை கொட்டகைகளிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.

5,000 ஹெக்டருக்கும் மேற்பட்ட வேளாண்மை நிலம் நீரில் மூழ்கியுள்ளது. தலைநகர் சோலின் முக்கிய நெடுஞ்சாலைகள், பாலங்கள் ஆகியவற்றின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தென் கொரியா அரசு 45,000-க்கும் மேற்பட்ட மீட்பு  படைகள் மற்றும் தன்னார்வத் தொழிலாளர்களையும் நியமித்துள்ளது. மேலும் நீர் விசையியக்கக் குழாய்கள் போன்ற கிட்டத்தட்ட 5,800 கனரக உபகரணங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →