பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: ஒருவர் பலி
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் செவ்வாய்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் விளையாட்டு அரங்கங்கள், குடியிருப்புகள் மற்றும் கரோனா தனிமைப்படுத்துதல் மையம் போன்றவை பாதிப்புக்குள்ளாகின. கட்டட இடிபாடுகளில் சிக்கி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதால் நோயாளிகள் கரோனா தனிமைப்படுத்துதல் மருத்துவமனையிலிருந்து தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.