முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி: 5 பேர் கைது

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:05 PM
பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி: 5 பேர் கைது
பகிர்:

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தகவல் கிடைத்ததையடுத்து லாகூரில் காவல்துறையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட  தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் லாகூரில் உள்ள சிவில் செயலகம் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.

தேடுதல்வேட்டையின்போது, ​​பயங்கரவாதிகளிடமிருந்து வெடிபொருள், ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →