இத்தாலியில் ஒரேநாளில் 19,903 பேருக்கு கரோனா
இத்தாலியில் ஒரேநாளில் 19,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலியில் ஒரேநாளில் 19,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 19,903 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,25,775ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு மேலும் 649 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 64,036ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தாலியை பொறுத்தரை கடந்த பிப்ரவரி மாதம் முதன் முதலில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் 7,21,33,741 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,12,250 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 5,05,08,262 பேர் குணமடைந்துள்ளனர்.