கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தவறான திசையில் வழிநடத்தி சென்றுள்ள அமெரிக்கா: அந்தோனி ஃபௌசி
அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆய்வகத்தின் தலைவரும், தலைசிறந்த தொற்றுநோய் நிபுணருமான அந்தோனி ஃபௌசி கொவைட்-19 நோய் பரவல் தடுப்புப் பணியில்
அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆய்வகத்தின் தலைவரும், தலைசிறந்த தொற்றுநோய் நிபுணருமான அந்தோனி ஃபௌசி கொவைட்-19 நோய் பரவல் தடுப்புப் பணியில் அமெரிக்காவின் செயல்களுக்குக் கடும் மனிநிறையின்மையைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி ஜூன் 30 ஆம் நாள் நாடாளுமன்றத்தின் செனெட் அவையின் கேள்வி நேரத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கரோனா தடுப்புப் பணியில் அமெரிக்கா தவறான திசையை நோக்கிச் செல்வதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது தெளிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போது அமெரிக்காவில் நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்போக்கு மாறா விட்டால், எதிர்காலத்தில் தினமும் இவ்வெண்ணிக்கை 1 இலட்சத்தை எட்டக் கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்