முகப்பு
உலகம்

சிங்கப்பூரில் புதிதாக 513 பேருக்கு கரோனா: அனைவரும் வெளிநாட்டினர்

சிங்கப்பூரில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 513 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
Singapore reports 513 new COVID-19 cases, all foreigners
பகிர்:

சிங்கப்பூரில் சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக 513 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார். இதையடுத்த அந்த நாட்டில் கிட்டத்தட்ட 50 அயிரத்தை எட்டியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தொற்றால் இதுவரை 45,172 பேர் குணமடைந்துள்ளனர். 27 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். 

அடுத்த இரண்டு வாரங்களுக்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.