உலகம்

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு

DIN

அமெரிக்காவின் பல மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அமெரிக்காவின் சி என் என் நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த சில வாரங்களில் அந்நாட்டின் 21 மாநிலங்களில் வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 8 மாநிலங்களின் நிலைமை நிதானமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பொருளாதார மீட்சிப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டம் வரக் கூடுமென நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இது பற்றி நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் பால் எம். ரோமெர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியளிக்கையில், கரோனா வைரஸைத் தடுப்பதில் சீனாவின் வூஹான் நகர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும். வைரஸுக்கான தடுப்பூசியைக் கண்டறியும் முன், பரிசோதனை பணிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

சீனாவின் வூஹான் நகரில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான பரிசோதனைகள்  காரணமாக வூஹான் நகரவாசிகள் நலன் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT