முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,471 பேருக்கு கரோனா பாதிப்பு; 89 பேர் பலி

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் 4,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கரோனாவுக்கு 89 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,590 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
ஒரே நாளில் கரோனாவுக்கு 89 பேர் பலியாகியுள்ளனர்.
பகிர்:

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் 4,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கரோனாவுக்கு 89 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,590 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4,471 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,81,088-ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 71,459 போ், சிகிச்சைக்குப் பிறகு அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா பாதிப்பில் சிந்து மாகாணம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாகாணத்தில் 69,628 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிந்துக்கு அடுத்த இடத்தில் பஞ்சாப், கைபா் பாக்துன்கவா மாகாணங்கள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

முழு கட்டுரையைப் படிக்க →