முகப்பு
உலகம்

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 16 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர்களில் 15 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படவா்களின் எண்ணிக்கை 83,881-ஆகவும் பலியானவா்களின் எண்ணிக்கை 4,633-ஆகவும் உள்ளது. அதில் 395 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 29 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

சீனாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கரோனாவால் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →