ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 7 பேர் பலி
ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியானார்கள்.
ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தான், குண்டூஸ் நகரின் தலோகா பகுதியில் உள்ள வீடுகள் மீது மோட்டார் குண்டுகளை வீசித் தலிபான்கள் நேற்று மாலை தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் பெண், குழந்தை என மொத்தம் 7 பேர் பலியானார்கள். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
எனினும் இந்த தாக்குதல் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.