முகப்பு
உலகம்

ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பரவல்..திணறும் சீனா

ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு சீனாவில் டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
கோப்புப்படம்
பகிர்:

சீனாவில் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று (செவ்வாய்கிழமை) அதிகரித்துள்ளது. பரிசோதனை மையத்திலிருந்து பரவ தொடங்கிய கரோனா சீனாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கரோனா பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், தற்போது டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவருகிறது. செவ்வாய்கிழமை மட்டும் 143 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு யாங்சோ நகரத்திலிருந்து கரோனா பரவ தொடங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →