இலங்கை : 12 வயதைக் கடந்த சிறார்களுக்கு தடுப்பூசி 
உலகம்

இலங்கை : 12 வயதைக் கடந்த சிறார்களுக்கு தடுப்பூசி

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கரோனா தாக்குதலின் பாதிப்புகளைக்  கட்டுப்படுத்த 12 வயதைத் தாண்டிய சிறார்களுக்கு  தடுப்பூசி வழங்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.

DIN

இலங்கையில் தீவிரமாக பரவி வரும் கரோனா தாக்குதலின் பாதிப்புகளைக்  கட்டுப்படுத்த 12 வயதைத் தாண்டிய சிறார்களுக்கு  தடுப்பூசி வழங்கப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ராஜபக்சே ' இலங்கையில் கரோனாவை படிப்படியாக கட்டுப்படுத்த குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிட்டிருக்கிறோம். முதலில் 12 வயதைக் கடந்த சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்' எனத் தெரிவித்திருக்கிறார்.

தற்போது 30 வயதைக் கடந்தவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதல் தவணை எடுத்துக்கொண்டவர்கள் 1.1 கோடி பேர் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 37 லட்சம் பேர் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,000 ஆகவும், பலி எண்ணிக்கை 6,096 ஆகவும் உள்ளது. இதன் காரணமாக அங்கு இரவு நேர ஊரடங்கு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT