உலகம்

தெற்கு பசிபிக் கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை

DIN

தெற்கு பசிபிக் கடலில் ரிக்டர் 6.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு பசிபிக் கடலில் உள்ள சிறிய தீவு வானுவாட்டு. சுமார் 80 தீவுகள் கொண்ட தீவுக் கூட்டமாக உள்ள வானுவாட்டு தீவும் அப்பகுதியில் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது.

இந்நிலையில் புதன்கிழமை தெற்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கம் வானுவாட்டு தீவில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பயங்கர நில அதிர்வு உணரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானுவாட்டு தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT