தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்: 200 கோடியைக் கடந்த சீனா 
உலகம்

தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்: 200 கோடியைக் கடந்த சீனா

சீனாவில் இதுவரை 200 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

DIN

சீனாவில் இதுவரை 200 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பரவலுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டப்பட்டுவருகிறது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி மொத்தம் உள்ள 140 கோடி மக்கள் தொகையில் 88.9 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டு இறுதிக்குள் சீன மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பாற்றலை அடைந்து விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனாவிற்கு எதிரான சீன தடுப்பூசி 70 சதவிகிதம் செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT