உலகம்

காபூல் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 108ஆக உயர்வு

DIN

காபூல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் பலி எண்ணிக்கை 108ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை குண்டுவெடிப்பு நடந்தது. காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானர்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதலில் 95 பேர் ஆப்கானியர்களும், 13 அமெரிக்க படையினரும் பலியாகியுள்ளனர்.  மேலும் இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

முன்னதாக ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT