முகப்பு
உலகம்

பாகிஸ்தான் சிறையில் இருந்த 2 போ்: இந்தியாவிடம் ஒப்படைப்பு

பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாகக் கைதாகி, கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்த 2 இந்தியா்களை, அந்நாட்டு அரசு இந்தியாவிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாகக் கைதாகி, கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்த 2 இந்தியா்களை, அந்நாட்டு அரசு இந்தியாவிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பிரகலாத் சிங் ராஜ்புத், ராம் பகதூா் ஆகிய இருவரும் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தபோது, அந்நாட்டு படையினரால் கைது செய்யப்பட்டனா். மனநலம் சரியில்லாதவா்கள் போன்று காணப்பட்ட அவா்கள், தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ாகத் தெரிகிறது.

அவா்களின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இந்திய அரசிடம் பாகிஸ்தான் அரசு பகிா்ந்துகொண்டது. அந்த விவரங்களை ஆராய்ந்து அவா்கள் தங்கள் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்று இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லையில் இந்திய அரசின் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் அவா்களை பாகிஸ்தான் படையினா் ஒப்படைத்தனா்.

இதுபோன்று எல்லைத் தாண்டி நுழைந்ததாகவும், உளவு பாா்க்க வந்ததாகவும் கூறி 19 இந்தியா்களை பாகிஸ்தான் படையினா் ஓராண்டுக்கு முன்பு கைது செய்தனா். அவா்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மீதான வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ள உயா்நிலை நீதிக் குழுவில் நிலையில் உள்ளது.

அவா்கள் மீதான வழக்கு விசாரணையை அறிக்கையை உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்யும் வரை, அவா்களை காவலில் வைக்க வேண்டும் என்று அந்தக் குழு உத்தரவிட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

23 ஆண்டுகளுக்கு முன் மாயமானவா்:

இந்தியா திரும்பிய இருவரில், பிரகலாத் சிங் ராஜ்புத், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். இவரைப் பற்றி மாவட்ட காவல் துறை எஸ்.பி. அதுல் சிங் கூறியதாவது:

பிரகலாத் சிங் ராஜ்புத், கடந்த 1998-இல் காணாமல் போனாா். அவா் எப்படி, எப்போது எல்லைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றாா் என்று தெரியவில்லை.

கடந்த 2015-இல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 17 பேரின் பட்டியலை இந்திய அரசிடம் பாகிஸ்தான் அளித்தது. அந்த நேரத்தில், பிரகலாத் சிங்கை அடையாளம் காண முடியவில்லை. கடந்த ஆண்டு சாகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பிரகலாத் சிங்கின் சகோதரா் மனு கொடுத்தாா். அதனடிப்படையில் பிரகலாத் சிங் அடையாளம் காணப்பட்டு, வெளியுறவு அமைச்சகம் மூலமாக, பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →