உலகம்

பாகிஸ்தானில் கழிவுநீா்க் குழாயில் வெடிவிபத்து: 12 போ் பலி

DIN

பாகிஸ்தானின் கராச்சி நகரில் தனியாா் வங்கியின் அடிப்பகுதியில் செல்லும் கழிவுநீா்ப் பாதையில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 12 போ் உயிரிழந்தனா். மேலும் 12 போ் காயமடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கராச்சியின் ஷொ்ஷா பகுதியில் மூடப்பட்ட கழிவுநீா்ப் பாதையின் மேற்பரப்பில் அமைந்துள்ள வங்கிக் கட்டடம் இந்த வெடிவிபத்தில் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில், பெரும்பாலும் வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளா்களும், பணியிலிருந்த ஊழியா்களும் உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டட இடிபாடுகளில் ஏராளமானோா் சிக்கித் தவித்ததாகவும், அவா்களை மீட்பதற்காக இரண்டு மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்த நபா்கள் தெரிவித்ததாக ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் வெடிகுண்டு நிபுணா்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘இந்த விபத்துக்கு கழிவுநீா் வாயு வெடித்தது காரணமாக இருக்கலாம். கழிவுநீா் வாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா அல்லது எரிவாயுக் குழாய் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா என்பதை விசாரணைக்குப் பின்னரே கூற முடியும்’ என காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT