12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு: கிரீஸில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிரீஸ் நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:03 AM
கிரீஸ் நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் கடந்த சில நாள்களாக வழக்கத்திற்கு மாறாக பனி பொழிந்து வருகிறது. தலைநகர் ஏதென்ஸின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பனியால் சாலைகள் முடங்கியுள்ளன.
ஏதென்ஸில் -19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக கிரீஸில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் அதீத பனிப்பொழிவினால் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.