உலகம்

பாகிஸ்தான்: விளையாடும்போது கையெறி குண்டு வெடித்து 2 சிறுவர்கள் பலி

DIN

 பெஷாவர்: பாகிஸ்தானில் விளையாடும்போது கையெறி குண்டு வெடித்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய அப்பகுதி காவல்துறை அதிகாரி ரியாஸ் அகமது, பாகிஸ்தானின் வடகிழக்கு பெஷாவரில் சிறுவர்கள் விளையாடும்போது கையெறி குண்டுகளை கண்டறிந்துள்ளனர். 

அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று விளையாடும்போது தவறுதலாக குண்டு வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

கைபர் கணவாய் மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியையொட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT