ரஷியாவில் புதிதாக 24,353 பேருக்கு கரோனா
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,353 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,353 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 13.4 சதவிகிதத்தினருக்கு எவ்வித அறிகுறியும் தென்படாமல் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாஸ்கோவில் 6,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 654 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,38,579 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 14,540 பேர் நோய்த் தொற்றிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். அந்நாட்டில் இதுவரை மொத்தம் 50,83,441 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.