மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) மகாவீர் ஜெயந்தியை கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) மகாவீர் ஜெயந்தியை கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வெளியிட்ட பங்குச் சந்தை விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மார்ச் 31ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 3ஆம் தேதியும், அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதியும், மகாராஷ்டிர தினத்திற்காக மே 1ஆம் தேதியும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மே 28ஆம் தேதியும் பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும்.
Advertisement
Advertisement
As nation celebrates Mahavir Jayanti tomorrow (March 31), a holiday has been declared for the stock markets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.