பாகிஸ்தான் - குண்டு வெடிப்பில் சிக்கி பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் பலி
பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தலில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்
உலகம்பாகிஸ்தான் - குண்டு வெடிப்பில் சிக்கி பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் பலி
பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தலில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்
இஸ்லாமாபாத் : பலுசிஸ்தான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தலில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.இதற்கு முன் கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு பாதுகாப்பு படை வீரர்களும் அதிகாரி ஒருவரும் குண்டு வெடிப்பில் பலியாகியிருந்த நிலையில் தற்போது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக பாதுகாப்பு படையினரின் மேல் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து ராணுவத்தின் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலின் படி ' குற்றவாளிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டையை தொடர்ந்திருப்பதாகவும் ,விரோத செயல்களை மேற்கொள்ளும் புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இது போல் கோழைத்தனமான தாக்குதல்கள்களில் ஈடுபடுபவர்களால் பலுசிஸ்தானின் அமைதியையும் செழிப்பையும் கெடுக்க முடியாது ' எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக ஜூன் 25 அன்று துணை ராணுவத்தைச் சேர்ந்த படைவீரர்கள் 5 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.