இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி
இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரைக் காணவில்லை.
கொழும்பு: இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரைக் காணவில்லை.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருக்கும் இலங்கையின் 6 மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகள், வேளாண் நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி இருவரும், நிலச்சரிவில் இருவரும் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.