உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, பலர் படுகாயம்

ANI

பாகிஸ்தானில் இன்று காலை குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

லாகூரின் ஜோஹார் டவுன் பகுதியில் உள்ள வீட்டின் வெளியே திடீரென்று வெடிகுண்டு வெடித்தது. அந்த சமயத்தில், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குண்டு வெடிப்பில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT