முகப்பு
உலகம்

ஆப்கனில் துப்பாக்கிச்சூடு: 7 தொழிற்சாலை பணியாளர்கள் பலி

ஆப்கனில் மர்மநபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தொழிற்சாலை பணியாளர்கள் பலியானார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
கோப்புப் படம்.
பகிர்:

ஆப்கனில் மர்மநபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தொழிற்சாலை பணியாளர்கள் பலியானார்கள். 
ஆப்கனின் சொர்க்ஹோர்ட் மாவட்டத்தில் நேற்றிரவு தொழிற்சாலை பணியாளர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 7 பணியாளர்கள் பலியானார்கள். 
இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரிவரவில்லை. 
எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.