முகப்பு
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு

ஜப்பான் நாட்டின் மியாகி மாகாணத்தில் ரிக்டர் 7.2 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு
பகிர்:

ஜப்பான் நாட்டின் மியாகி மாகாணத்தில் ரிக்டர் 7.2 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சனிக்கிழமை ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியான மியாகியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பயங்கர நில அதிர்வுகளால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். 

ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. மியாகி பிராந்தியத்தில் 60 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த மாதம் இதே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →