முகப்பு
உலகம்

சிங்கப்பூர் சிறையில் 5000 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை

சிங்ப்பூரின் சாங்கி சிறைச்சாலையில் சுமார் 5000 கைதிகள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
சிங்கப்பூர் சிறையில் 5000 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை
பகிர்:

சிங்ப்பூரின் சாங்கி சிறைச்சாலையில் சுமார் 5000 கைதிகள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். 

சிறையில் பணிபுரியும் சமையல் செய்யும் நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள கைதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று சிங்கப்பூர் சிறை சேவை (எஸ்.பி.எஸ்) தெரிவித்துள்ளது.

39 வயதான சமையலாளர் கடந்த புதன்கிழமை கடைசியாக வேலை செய்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஏற்பட்ட நிலையில், மருத்துவச் சிகிச்சையில் அவருக்குத் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். 

Advertisement

நாட்டில் இதுவரை 61,500க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments