உலகம்

தைவான் விவகாரம்: சீனா-அமெரிக்க அதிபர்கள் நவ.15இல் ஆலோசனை

DIN

தைவான்-சீனா இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில் சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தைவான் எல்லைப் பகுதிகளுக்குள் சீன அரசு இதுவரை இல்லாத அளவு தங்களது போர் விமானங்கள் மூலம் ஊடுருவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம்சாட்டி வருகிறார்.

தைவான்-சீனா இடையேயான இந்த பிரச்னையில் அமெரிக்காவும் ஆர்வம் காட்டி வருவது சர்வதேச அரங்கில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் தைவான் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT