தைவான் விவகாரம்: சீனா-அமெரிக்க அதிபர்கள் நவ.15இல் ஆலோசனை 
உலகம்

தைவான் விவகாரம்: சீனா-அமெரிக்க அதிபர்கள் நவ.15இல் ஆலோசனை

தைவான்-சீனா இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில் சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

DIN

தைவான்-சீனா இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில் சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தைவான் எல்லைப் பகுதிகளுக்குள் சீன அரசு இதுவரை இல்லாத அளவு தங்களது போர் விமானங்கள் மூலம் ஊடுருவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம்சாட்டி வருகிறார்.

தைவான்-சீனா இடையேயான இந்த பிரச்னையில் அமெரிக்காவும் ஆர்வம் காட்டி வருவது சர்வதேச அரங்கில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் தைவான் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT