தைவான் விவகாரம்: சீனா-அமெரிக்க அதிபர்கள் நவ.15இல் ஆலோசனை 
உலகம்

தைவான் விவகாரம்: சீனா-அமெரிக்க அதிபர்கள் நவ.15இல் ஆலோசனை

தைவான்-சீனா இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில் சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

DIN

தைவான்-சீனா இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில் சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தைவான் எல்லைப் பகுதிகளுக்குள் சீன அரசு இதுவரை இல்லாத அளவு தங்களது போர் விமானங்கள் மூலம் ஊடுருவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம்சாட்டி வருகிறார்.

தைவான்-சீனா இடையேயான இந்த பிரச்னையில் அமெரிக்காவும் ஆர்வம் காட்டி வருவது சர்வதேச அரங்கில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் தைவான் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

மன அழுத்தத்திற்கு இதுவும் முக்கிய காரணம்!

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்!

SCROLL FOR NEXT