இலங்கையில் தளர்த்தப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் 
உலகம்

இலங்கையில் தளர்த்தப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள்

பொருளாதார நெருக்கடி காரணமாக  கரோனா பரவலால் விதிக்கப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இலங்கை அரசு அறிவித்துள்ளது.

DIN

பொருளாதார நெருக்கடி காரணமாக  கரோனா பரவலால் விதிக்கப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்து வந்த டெல்டா வகை கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து 3 முறை நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில்கொண்டு புதிய தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்லவும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மக்கள் பொது இடங்களில் கூட்டமாகக் கூடவும், பூங்காக்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 5,16,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டும் அவர்களில் 12,847 பேர் சிகிச்சை பலனளிகாமல் பலியாகியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT