டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: மாணவர்கள் படுகாயம்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெக்ஸாஸ் மாகாணத்தின் மேன்ஸ்பீல்டு நகரத்தின் டிம்பர்வியூவ் எனும் பள்ளியில் புதன்கிழமை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
அடையாளம் தெரியாத நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம் அடைந்ததாக பள்ளியில் இருந்து வந்த தகவலில் தெரிவிக்கப்பட்டதாக அம்மாகாண காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து சட்ட அமலாக்கத் துறையை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.