முகப்பு
உலகம்

ரஷியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 27,550 பேருக்கு பாதிப்பு

ரஷியாவில் ஒரேநாளில் 27,550 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

ரஷியாவில் ஒரேநாளில் 27,550 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,550 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும்.

அதிகபட்சமாக மாஸ்கோவில் 5,404 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  76,90,110ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 924 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2,13,549ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவிலிருந்து 20,330 பேர் மீண்டனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 67,99,230ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.