உலகம்

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: சுற்றுலாத் தலங்கள் மூடல்

DIN

சீனாவின் வடக்கு மாகாணங்களில் மீண்டும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று வைரஸ் முதன்முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட நிலையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அது பரவியது. 
சீனாவில் விதிக்கப்பட்ட தொடர் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் சீனாவின் வடக்கு மாகாணங்களில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வைரஸ் பரவலைத் தடுக்க ஏற்கெனவே 9 மாகாணங்களில் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் மங்கோலியா, கன்சூ மற்றும் பெய்ஜிங் பகுதிகளில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சீனாவில் தற்போது இரட்டை இலக்கங்களில் கரோன தொற்று எண்ணிக்கை இருந்தாலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT