உலகம்

டிரோன் தாக்குதலில் அல் கொய்தா முக்கியத் தலைவர் கொலை

DIN

சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாதக் குழுவின் முக்கியத் தலைவர் அப்துல் ஹமீத் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சிரியா மற்றும் இராக் எல்லைப் பகுதிகளுக்கு இடையில் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் இராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சிரியாவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவர் அப்துல் ஹமீத் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க மத்திய தலைமையகத்தின் ஊடகப்பிரிவு செய்தித் தொடர்பாளர் ஜான் ரிக்ஸ்பி தெரிவித்ததாவது, “உலகளாவிய அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்கள் அப்துல் ஹமீத் கொலையால் சீர்குலையும்” என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிரியாவில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது அல் கொய்தா அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் யாரும் காயமடையவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT