உலகம்

நேபாளத்திற்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய இந்தியா

DIN

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 50 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் 2 மாகாணங்களில் உள்ள பர்சா, பாரா, ரவுதாஹத், சர்லாஹி, மஹோட்டரி மற்றும் தனுஷா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்திய அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

பர்சா மாவட்டத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT