முகப்பு
உலகம்

மலேசியப் பிரதமருக்கு புதிய சிக்கல்: ஆட்சியில் தொடர்வாரா?

மலேசியாவில் ஆளும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சி திரும்பப் பெற்றுள்ள நிலையில் பிரதமர் முகைதீன் யாசின் ஆட்சியில் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
மலேசியப் பிரதமருக்கு புதிய சிக்கல்: ஆட்சியில் தொடர்வாரா?
பகிர்:

மலேசியாவில் ஆளும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சி திரும்பப் பெற்றுள்ள நிலையில் பிரதமர் முகைதீன் யாசின் ஆட்சியில் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் கூட்டணிக் கட்சியான ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பின் ஆதரவில் பிரதமர் முகைதீன் யாசின் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் அக்கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகைதீன் யாசினுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளனர். 

இதனால் அவர் ஆட்சியில் தொடர்வதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள முகைதீன் யாசின் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் தான் பதவி விலகப் போவதில்லை எனத் தெரிவித்தார். 

மேலும் அடுத்த மாதத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டதில் அதிருப்தியை சந்தித்துள்ள முகைதீன் யாசினுக்கு தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது அந்நாட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →