முகப்பு
உலகம்

ஜோர்டான் நாடாளுமன்றத்தில் மோதல்: நேரலையில் கண்ட மக்கள்

ஜோர்டான் நாட்டின் நாடாளுமன்றத்தில் அரசமைப்பு திருத்தம் தொடர்பான விவாதத்தின்போது உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Updated On : 29 டிசம்பர், 2021 at 6:13 PM
ஜோர்டான் நாடாளுமன்றத்தில் நடந்த மோதல்
பகிர்:

ஜோர்டான் நாட்டின் நாடாளுமன்றத்தில் அரசமைப்பு திருத்தம் தொடர்பான விவாதத்தின்போது உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஜோர்டான் நாட்டின் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அரசமைப்பில் திருத்தம் செய்வது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அரசமைப்பின்படி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை வழங்குவது தொடர்பாகவும், பெண்களை அப்பட்டியலில் இணைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் விவாதத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் மூண்டது. இதனால் அவையிலிருந்து அனைவரும் வெளியேறுமாறு அவைத்தலைவர் அப்துல் கரிம் துக்மி உத்தரவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பேரவை துணைத்தலைவர் சுலைமான் அபு யாங்யா, அவையை நடத்த துக்மிக்கு தார்மீக உரிமையில்லை என தெரிவித்தார்.

இந்த வாக்குவாதம் இருவருக்கிடையேயான தாக்குதல் சம்பவத்திற்கு வழிவகுத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் இந்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது. அதனைத் தொடர்ந்து சக உறுப்பினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.