உலகம்

பாக். நாடாளுமன்ற துணைத் தலைவர் ராஜிநாமா

​பாகிஸ்தான் நாடாளுமன்ற பேரவை துணைத் தலைவர் பொறுப்பை காசிம் சுரி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு ராஜிநாமா செய்துள்ளார்.

DIN


பாகிஸ்தான் நாடாளுமன்ற துணைத் தலைவர் பொறுப்பை காசிம் சுரி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு ராஜிநாமா செய்துள்ளார்.

தனது ராஜிநாமா கடிதத்தை காசிம் சுரி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "பாகிஸ்தான் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நாட்டு நலன்கள் மற்றும் சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுவோம். பாகிஸ்தானைப் பாதுகாக்க எந்தவொரு எல்லைக்கும் நாங்கள் செல்வோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏப்ரல் 3-ம் தேதி தள்ளுபடி செய்தது, நாடாளுமன்ற பேரவைத் தலைவர் தேர்தல் நடத்துவதற்காக ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 22 வரை நடைபெறவிருந்த கூட்டத்தொடரை ரத்து செய்தது போன்ற முடிவுகளால் காசிம் சுரி மீது விமர்சனங்கள் எழுந்தன. அவர் தற்போது பேரவைத் தலைவராக (பொறுப்பு) செயல்பட்டு வருகிறார்.

இதையடுத்து, ஏப்ரல் 9-ம் தேதி காசிம் சுரிக்கு எதிராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த முர்தாஸா ஜாவெத் அபாஸி நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.  

இந்த நிலையில், காசிம் சுரிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பு பேரவை துணைத் தலைவர் பொறுப்பை அவர் ராஜிநாமா செய்துள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்ற பேரவைத் தலைவர் பொறுப்பு வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜா பர்வேஸ் அஷ்ரப் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT