உலகம்

இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி: பிரதமர் பதவியிலிருந்து விலகும் மகிந்த ராஜபட்ச?

DIN


கொழும்பு: இலங்கையில், அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் புதிய அரசு புதிய பிரதமர் தலைமையில் அமைய அந்நாட்டு அதிபர் ஒப்புக்கொண்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரா கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில், அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் புதிய அமைச்சரவை அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரா காட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேனா இது குறித்து தெரிவித்திருப்பதாவது,  பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கவும், அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் புதிய அமைச்சரவை அமைக்கவும் அதிபர் கோத்தபய சம்மதம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை, அதிபர் கோத்தபய ராஜபட்சவுடன் 11 கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT