கோப்புப்படம் 
உலகம்

தமிழகம் தலையீடு: நடராஜர் சிலை ஏலத்தை நிறுத்தியது பாரீஸ் ஏல மையம்

பாரிஸில் இயங்கி வரும் கிறிஸ்டீ என்ற ஏல மையத்தில், ஏலம் விடப்படுவதாக இருந்த 500 ஆண்டுகள் பழைமையான நடராஜர் சிலை, தமிழகத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.

PTI

சென்னை: பாரிஸில் இயங்கி வரும் கிறிஸ்டீ என்ற ஏல மையத்தில், ஏலம் விடப்படுவதாக இருந்த 500 ஆண்டுகள் பழைமையான நடராஜர் சிலை, தமிழகத்தைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவில்பட்டியில் இருந்து 1972ஆம் ஆண்டு திருடப்பட்ட 500 ஆண்டுகள் பழைமையான நடராஜர் சிலை கிறிஸ்டீ ஏல நிறுவனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாநில காவல்துறை மூலம் ஏல மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏலம் தொடர்பாக கிறிஸ்டீ மையம் தனது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, கயத்தாறு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட ராமேஸ்வர் கோயிலுக்குச் சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி கே. ஜெயந்த் முரளி, ஏல மையத்தை சமூக வலைத்தளம் மூலமாகத் தொடர்பு கொண்டு, தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, ஏலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸில் உள்ள இந்திய தூதர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த வெண்கலச் சிலை, 15 - 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், இந்தச் சிலையை மீண்டும் தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் - வெள்ளி விலை!

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

SCROLL FOR NEXT