பெரு: பேருந்து விபத்தில் 20 பேர் பலி, 33 பேர் காயம்
பெருவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.
பெருவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.
பெரு நாட்டின் படாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தயபம்பா பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 20 பேர் பலியானதோடு 33 காயமடைந்தனர். விரைந்து சென்ற மீட்புப்படை காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த புதன்கிழமை நடந்த இந்த விபத்தில் சிலர் படுகாயங்களுடன் இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.