உலகம்

வடகொரியா ஏவுகணை சோதனை: ஜப்பான், தென்கொரியா கண்டனம்

DIN

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக ஜப்பான் மற்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரிய நாடானது அவ்வப்போது நடத்திவரும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பன்னாட்டு அமைப்புகள் மற்றும் அண்டை நாடுகளின் எச்சரிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் அதிநவீன பாலிஸ்டிக் வகை ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 மாத இடைவெளிக்கு வடகொரியா மேற்கொண்டுள்ள ஏவுகணை சோதனை இதுவாகும்.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை குறித்து அண்டை நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனை மூலம் கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் வடகொரியா அணுசக்தி பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதை இந்த ஏவுகணை சோதனை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் ஏவுகணை சோதனை குறித்து எந்தவிவரங்களையும் இதுவரை வடகொரியா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT