சைப்ரஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கிழக்கு மத்தியதரைக் கடல் நாடான சைப்ரஸில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடும் ஏற்பட்டது.
கிழக்கு மத்தியதரைக் கடல் நாடான சைப்ரஸில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடும் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.1 அலகுகளாகப் பதிவானது.
அந்த நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியிலிருந்து 50 கி.மீ. தொலைவில், 25 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக சைப்ரஸ் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடா்ந்து ஏராளமான பின் அதிா்வுகள் ஏற்பட்டதாக அந்த மையம் கூறியது.
நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.