உலகம்

இலங்கை அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்

DIN

இலங்கை அரசு தொலைக்காட்சியை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரத்தில் அதிபர் மற்றும் பிரதமர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிபர் மாளிகையைவிட்டு வெளியேறிய கோத்தபய ராஜபட்ச தனது பதவியை இன்று ராஜிநாமா செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதனிடையே, இன்று அதிகாலை இலங்கையிலிருந்து ராணுவ விமானம் மூலம் மாலத்தீவு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கோத்தபய தப்பிச் செல்ல உதவியதாக பிரதமர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே இலங்கை அரசு தொலைக்காட்சியான ஜாதிகா ரூபாவஹினி அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அதிபர் பதவியை ராஜிநாமா செய்யாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்தது இலங்கை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

SCROLL FOR NEXT