கோத்தபய ராஜபட்ச 
உலகம்

இலங்கை அதிபருக்கு அடைக்கலம் தருகிறோமா? சிங்கப்பூர் விளக்கம்

இலங்கை அதிபருக்கு அடைக்கலம் தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை விளக்கமளித்துள்ளது.

DIN

இலங்கை அதிபருக்கு அடைக்கலம் தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை விளக்கமளித்துள்ளது.

இலங்கையில் தொடர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபட்ச மாலத்தீவு தப்பித்து சென்ற நிலையில் அங்கிருந்து சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இலங்கை அதிபர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருப்பது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக சிங்கப்பூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், சிங்கப்பூரில் அடைக்கலம் வேண்டி அவர் தரப்பிலிருந்து எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோத்தபய ராஜபட்சவிற்கு அடைக்கலம் தரவில்லை எனவும் சிங்கப்பூர் அரசு விளக்கமளித்துள்ளது. சிங்கப்பூரைத் தொடர்ந்து கோத்தபய ராஜபட்ச செளதி அரேபியாவிற்கு பயணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT