கோத்தபய ராஜபட்ச 
உலகம்

இலங்கை அதிபருக்கு அடைக்கலம் தருகிறோமா? சிங்கப்பூர் விளக்கம்

இலங்கை அதிபருக்கு அடைக்கலம் தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை விளக்கமளித்துள்ளது.

DIN

இலங்கை அதிபருக்கு அடைக்கலம் தருவது தொடர்பாக வெளியான செய்திக்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை விளக்கமளித்துள்ளது.

இலங்கையில் தொடர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபட்ச மாலத்தீவு தப்பித்து சென்ற நிலையில் அங்கிருந்து சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இலங்கை அதிபர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்திருப்பது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக சிங்கப்பூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், சிங்கப்பூரில் அடைக்கலம் வேண்டி அவர் தரப்பிலிருந்து எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோத்தபய ராஜபட்சவிற்கு அடைக்கலம் தரவில்லை எனவும் சிங்கப்பூர் அரசு விளக்கமளித்துள்ளது. சிங்கப்பூரைத் தொடர்ந்து கோத்தபய ராஜபட்ச செளதி அரேபியாவிற்கு பயணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

SCROLL FOR NEXT